உள்ளூர் செய்திகள்
- விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 49), சமையல் மாஸ்டர். இவர், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்து கொண்ட முத்துவுக்கு விஜயராணி என்ற மனைவியும், அரிகரன் என்ற மகனும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர்.