கட்டிட தொழிலாளி கல்லால் அடித்து கொலை
- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள சிங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47) இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கன்னியம்மாள், இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள், உள்ளனர்.அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, (45).
வெங்கடேசன், ராஜா, இருவருமே கட்டிட தொழிலாளிகள், சக தொழிலாளியான இவர்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 27ஆம் தேதி இரவு வெங்கடேசன் சிங்கமுண்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த ராஜா, கல்லால் வெங்கடேசனை, தலையில் தாக்கி உள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசனை, அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன், ாரிதபமாக இறந்தார். இது குறித்து தேசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.