உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் திருவத்தூரில் கிழக்கு மாடவீதியில் மூர்த்தி விக்னேஷ்வர் கோவில் அமைந்துள்ளது.
நேற்று இரவு இந்த கோவிலின் கேட்டை உடைத்து மர்ம கும்பல் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்துள்ளனர். பின்னர் அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை திருடி சென்றனர்.
மேலும் அதே பகுதியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், வலம்புரி விநாயகர் கோவில்களில் திருட முயன்றுள்ளனர். இது குறித்து செய்யாறு போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.