உள்ளூர் செய்திகள்

ஆதிபராசக்தி மன்றத்தில் அன்னதான விழா

Published On 2022-11-26 15:34 IST   |   Update On 2022-11-26 15:34:00 IST
  • சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது
  • செவ்வாடை தொண்டர்கள் மூலம் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் மாரியம்மன் கோவிலில் அன்னதான விழா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பகல் 12 மணி அளவில் சென்னை தி.நகர் பகுதியை சார்ந்த கிஷோர், ஜோதி, ஸ்ரீராம், அமிர்த ஸ்ரீ லட்சுமி இவர்களின் ஏற்பாட்டின்படி, செவ்வாடை தொண்டர்கள் மூலம் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மன்ற தலைவர் பாலசுப்பிர மணியன், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் பாலசுப்பிர மணியன், துணை செயலாளர்கள் முருகன், குமரேசன், ஜெயபால், தணிக்கைக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், புரோகிதர் மணி மற்றும் செவ்வாடை தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News