உள்ளூர் செய்திகள்
குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டை மனைவி உண்ணாமலை (வயது 85).
கடந்த 17-ந் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் உண்ணாமலை பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வந்தவாசி தெற்கு நிலைய போலீசார் உண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.