உள்ளூர் செய்திகள்
பைக் பள்ளத்தில் விழுந்து ஏ.சி.மெக்கானிக் சாவு
- சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மருதாடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் சந்திரசேகர் (வயது 32), ஏ.சி. மெக்கானிக்.
இவர், மோட்டார் சைக்கிளில் வந்தவாசி- மேல்ம ருவத்தூர் சாலையில் கல்லாங்குத்து கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலைதடு மாறி சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந் தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.