உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த போது எடுத்த படம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2023-03-27 14:10 IST   |   Update On 2023-03-27 14:10:00 IST
  • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
  • மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சமீப நாட்களாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று தாிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Tags:    

Similar News