உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2022-11-10 15:21 IST   |   Update On 2022-11-10 15:21:00 IST
  • 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
  • போலீசார் விசாரணை

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் சப் இன்ஸ்பெக்டர் அரசு, மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடுக்கனூர், செய்யாற்று படுகை அருகே 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்திக் கொண்டு வந்தனர்.

போலீசார் வருவதை கண்டவுடன் 3 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதில் மேல்மட்டை விண்ணமங்கலம் புதுக்கோட்டை, பகுதியை சேர்ந்த 2 பேரை மடக்கி பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News