உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு முகாம் நடந்த காட்சி.

கூட்டுறவு வங்கி சார்பில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம்

Published On 2022-08-04 14:40 IST   |   Update On 2022-08-04 14:40:00 IST
  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர்
  • ரூ.3,60,000 கடன் வழங்கப்பட்டது

வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மாங்கால் கூட்ரோடு கிளை சார்பில் எஸ் கே தண்டலம் கிராமத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கிளை மேலாளர் பி ஜெயந்தி தலைமை தாங்கினார் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் வங்கி மூலம் வழங்கப்படும் சேவைகள் மாற்றுத்திறனாளி கடன்கள் கால்நடை பராமரிப்பு மூலதன கடன் விதவைகளுக்கான உதவி கடன் நடமாடும் ஏடிஎம் நடமாடும் வாகனம் மூலம் கணக்கு துவக்குதல் ஆகிய குறித்து விளக்கப்பட்டது.

தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு நேரடி கடன் ரூ.3,60000 வழங்கப்பட்டது. இதில் வங்கி உதவியாளர் தீபா காசாளர் சபரிநாதன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News