உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாகாளியம்மன் கோவில் ஆடிப்பூரத்திருவிழா நாளை தொடங்குகிறது
- காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.
- 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் - தாராபுரம் ரோடு கரட்டாங்காடு சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில் ஆடிப்பூரத்திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
நாளை காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, அம்மன் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்கிறது. அதன் பின்னர் மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.