உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாகாளியம்மன் கோவில் ஆடிப்பூரத்திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2022-07-31 05:40 GMT   |   Update On 2022-07-31 05:40 GMT
  • காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.
  • 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடக்கிறது.

திருப்பூர் :

திருப்பூர் - தாராபுரம் ரோடு கரட்டாங்காடு சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில் ஆடிப்பூரத்திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

நாளை காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, அம்மன் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்கிறது. அதன் பின்னர் மாலை 5 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News