உள்ளூர் செய்திகள்

மேயர் தினேஷ்குமார்.

அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி பாதித்த மாணவியின் மருத்துவ செலவை முழுமையாக ஏற்ற மேயர்

Published On 2023-08-28 04:50 GMT   |   Update On 2023-08-28 04:50 GMT
  • மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.
  • ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

திருப்பூர்:

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துபட்டியை சேர்ந்தவர் டேவிட்ராஜ்-ரூபிஜெனிபர். இந்த தம்பதியின் மகள் ஜோஸ்லின் ஹெனியா (வயது 14). டேவிட்ராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூர் செரங்காட்டில் குடியிருந்து வருகிறார்.

இவருடைய மகள் ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி கழிவறைக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி காயம் அடைந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் கழுத்து, கை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மேயர் தினேஷ்குமார் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி அந்த மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

Tags:    

Similar News