உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் மாதம் வெளியீடு

Published On 2022-09-12 12:11 GMT   |   Update On 2022-09-12 12:11 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வெளியிடப்படுகிறது.
  • டிசம்பர் 8-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பூர் :

இந்தாண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் இது வெளியிடப்படுகிறது. டிசம்பர் 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பில் வாக்காளர்கள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. போலி வாக்காளர்களை இதன் மூலம் களைய முடியும். தங்கள் ஓட்டுரிமையை வேறு யாரும் முறைகேடாக பயன்படுத்த முடியாமல் செய்வதற்கும் இது உதவும்.வெளி மாவட்டம், வெளிமாநில தொழிலாளர் நிறைந்த திருப்பூரில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு மூலம் நிச்சயமாகஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றனர்.

Tags:    

Similar News