உள்ளூர் செய்திகள்

றப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்த காட்சி.

பல்லடம் பகுதி கோவில்களில் தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு

Published On 2023-11-04 10:39 GMT   |   Update On 2023-11-04 10:39 GMT
  • முத்துக்குமாரசுவாமிக்கு 18 வகை வாசனை திரவியங்களால், அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது.
  • பல்வேறு கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஐப்பசி மாத தேய் பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி, பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில்ச சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம், பால், தயிர், தேன் உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால், அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இதேபோல பல்லடம் காந்தி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில், அங்காளம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News