உள்ளூர் செய்திகள்

புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தம்.

பொங்கலூரில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் திறப்பு

Published On 2023-08-11 07:56 GMT   |   Update On 2023-08-11 07:56 GMT
  • ரூ.9.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
  • பொங்கலூர் ஒன்றிய குழுதலைவர் வக்கீல்.எஸ். குமார் முன்னிலை வகித்தார்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி, சக்தி நகர் மற்றும் ஐயப்பா நகர் பகுதியில் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.பொங்கலூர் ஒன்றிய குழுதலைவர் வக்கீல்.எஸ். குமார் முன்னிலை வகித்தார்.

ஊராட்சி நிதியின் மூலம் ரூ.9.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே பணிகள் நிறைவு பெற்ற பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகே பொது கழிப்பிடம், அம்மாபாளையம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, நாராயணநாயக்கன் புதூர் பகுதியில் மேல்நிலை தொட்டி ஆகியவையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

Tags:    

Similar News