உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பொங்கலூர், வீரபாண்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-11-24 04:33 GMT   |   Update On 2022-11-24 08:02 GMT
  • பொங்கலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜி.ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டி :

பொங்கலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என்.என். புதூர், காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜி.ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பர்மான வட்ட செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-வீரபாண்டி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை குறிஞ்சிநகர், ஆலங்காடு, வீரபாண்டிபிரிவு, வீரபாண்டி ரோடு, புளியங்காடு, ஜே.ஜே.நகர், எம்.பி.எஸ்.முத்துநகர், சவுடேஸ்வரி நகர், கிருஷ்ணாநகர், லட்சுமிநகர் கார்டன் கிழக்கு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இ்வ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News