உள்ளூர் செய்திகள்

திருப்பூர்,ஆக.24-

மகாராஷ்டிரா மாநிலம், வாஷி நகரில் செயல்பட்டு வரும் நவி மும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.1.25 கோடி வழங்கப்ப ட்டுள்ளது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  படம்.

நவீன உலகின் சவால்களை எதிா்கொள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

Published On 2023-08-24 10:46 IST   |   Update On 2023-08-24 10:46:00 IST
  • தமிழ் சங்கத்தின் கட்டிட புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.1.25 கோடி வழங்கப்ப ட்டுள்ளது.
  • மூத்த தலைமுறையினா் அவா்களுக்கு வழங்குதல் அவசியம்.

திருப்பூர்:

மகாராஷ்டிரா மாநிலம், வாஷி நகரில் செயல்பட்டு வரும் நவி மும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.1.25 கோடி வழங்கப்ப ட்டுள்ளது.

இந்த நிலையில் புனரமைக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கற்பித்தல் மையங்கள்

உலகின் மூத்த குடியாக விளங்கும் தமிழா்கள் தற்போது உலகமெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றனா்.அவ்வாறு புலம்பெயா்ந்து வாழ்ந்து வரும் தமிழா்கள், தமது பிள்ளைகள் தமிழ் பயில ஊக்குவித்து வருகிறாா்கள்.

புலம்பெயா்ந்து வாழும் தமிழா்களின் பிள்ளைகள் தாம் எதற்காகத் தமிழ்மொழியைக் கற்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவும், தமிழை கற்பதால் அடையக் கூடிய நன்மைகள் என்ன என்பதையும் ஆசிரியா்கள் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். அதற்கு பொருத்தமான பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், கற்பித்தல் மையங்கள் அமைத்துத் தரஎவேண்டும்.

சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல்

நவீன அறிவியல் உலகில் ஒரு மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால் அதன் வோ்களில் ஒன்றாக அறிவியல் விளங்குவது அவசியம்.நவீன உலகின் சவால்களை எதிா்கொ ள்ளும் ஆற்றல் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு.

புலம் பெயா் நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளால் இதற்கு அளப்பரிய பங்களிப்பை நல்க முடியும். அதற்கான வழிகாட்டலை மூத்த தலைமுறையினா் அவா்களுக்கு வழங்குதல் அவசியம்.

பிற மாநிலங்களில் வாழும் தமிழா்கள் தமிழை வளா்க்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News