உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காமராஜர் பிறந்தநாளையொட்டி - காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது

Published On 2022-07-12 08:45 GMT   |   Update On 2022-07-12 08:45 GMT
  • காமராஜரின் 120 வது பிறந்த நாளை காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்படுகிறது.
  • மங்களம் அரசு பள்ளிக்கு தேவையான உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

திருப்பூர் :

காமராஜர் மக்கள் மன்ற தலைவர் எம்.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதேபோல் இந்த ஆண்டும் காமராஜரின் 120 வது பிறந்த நாளை வருகிற 15ந்தேதி காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் ஜாதி மதம் கடந்து காமராஜர் வழியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அதன்படிதிருப்பூர் குமரன் காலேஜ் அருகில் பெரியாண்டிபாளையம்மங்கலம் மெயின் ரோட்டில் வருகிற 15-ந்தேதி காலை 7 மணிக்குகாமராஜர் மக்கள் மன்றம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. காலை8 மணிக்கு அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்படுகிறது.

தொடர்ந்து ஏழை- எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், மங்களம் அரசு பள்ளிக்கு தேவையான உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.தொடர்ந்துபகல் 11.30 மணிக்கு காமராஜர் மக்கள் மன்றத்தின் சார்பில்எஸ்.எஸ்.டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பித்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜர்மக்கள் மன்ற தலைவர் எம்.மாதவன் தலைமையில் செயலாளர் எம்.அலெக்ஸ்,பொருளாளர் எல்.ஐ.சி. கே.பழனியப்பன், துணைத்தலைவர்ஏ.பிரான்சிஸ், துணை செயலாளர் ஜே.அந்தோணி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News