உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

நொய்யல் ஆற்றின் கரையோரம் மேம்பாட்டு பணிகள்:- ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் ஆய்வு

Published On 2023-05-20 07:35 GMT   |   Update On 2023-05-20 07:35 GMT
  • . இந்த பணி–களை ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் கிரன் குராலா ஆய்வு மேற்கொண்டார்.
  • நொய்–யல் நதியில் இருபுறமும் சாலைகள் அமைத்து பொழுது போக்கு அம்சங்களுடன் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நொய்யல் நதியில் இருபுறமும் சாலைகள் அமைத்து பொழுது போக்கு அம்சங்களுடன் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் கிரன் குராலா ஆய்வு மேற்கொண்டார். மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் உடனிருந்தனர்.

நொய்–யல் ஆற்றின் சிறப்பு குறித்தும், கரையின் இருபுற–மும் சாலைகள் அமைத்து மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் மேயர் எடுத்துக்கூறினார். திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தரத்துடன் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News