உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் வழியாக மகாராஷ்டிராவிற்கு சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2022-10-29 11:22 IST   |   Update On 2022-10-29 11:22:00 IST
  • சனிக்கிழமைதோறும் புறப்படும் இந்த ெரயில் திங்கட்கிழமை சென்று சேரும். முன்னதாக நவம்பர் 4-ந் தேதி, ஹஸூர்
  • நடப்பாண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை இரு மார்க்கத்திலும் இந்த ெரயில் இயக்கம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க எர்ணாகுளம் - ஹஸூர் சாஹிப் நாந்தேட் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5-ந் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஹஸூர் சாஹிப் நாந்தேட்க்கு சிறப்பு ெரயில் புறப்படுகிறது. எர்ணாகுளத்தில் புறப்படும் ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் நின்று வடமாநிலங்கள் வழியாக பயணித்து, மகாராஷ்டிரா மாநிலம் ஹஸூர் சாஹிப் நாந்தேட் சென்றடையும். சனிக்கிழமைதோறும் புறப்படும் இந்த ெரயில் திங்கட்கிழமை சென்று சேரும்.

முன்னதாக நவம்பர் 4-ந் தேதி, ஹஸூர் சாஹிப் நாந்தேட்டில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ெரயில் புறப்படும். நடப்பாண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை இரு மார்க்கத்திலும் இந்த ெரயில் இயக்கம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ெரயிலில்7 ஏ.சி., 7படுக்கை வசதி, இரண்டு பொது பெட்டி உள்ளிட்ட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News