உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உடுமலை புத்தக திருவிழாவை பார்வையிட்ட பள்ளி மாணவிகள்

Published On 2022-09-24 06:36 GMT   |   Update On 2022-09-24 06:36 GMT
  • விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.
  • பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமிக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

உடுமலை:

உடுமலை தேஜஸ் மஹாலில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர். பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி வழிகாட்டுதலுடன் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா அறிவுரையின் பேரில் பள்ளி மாணவிகளை அழைத்துச் சென்று நூல் அரங்குகளை காண்பித்து பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்டுள்ள நூல்களை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான நூல்களை வாங்கிச் சென்றனர். வாசிப்பின் அவசியம் குறித்த அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்களை வழி நடத்தி சென்ற பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமிக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News