உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி பலியான முதியவர். 

காங்கயம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2023-05-21 08:09 GMT   |   Update On 2023-05-21 08:09 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதியவர் மீது மோதிவிட்டு தப்பி சென்று விட்டார்.
  • போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கேயம்:

காங்கேயம் அருகேயுள்ள நத்தக்காடையூர் கோவை - காங்கேயம் ரோட்டில் சம்பவத்தன்று இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதியவர் மீது மோதிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற நபரை பிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி. கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News