உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மசாஜ் சென்டர் பெண்களை கத்தியால் தாக்கிய 4 வாலிபர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை - திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2023-10-08 12:07 GMT   |   Update On 2023-10-08 12:08 GMT
  • கே.வி.ஆர்.நகரை சேர்ந்த காளிஸ்வரன் (27), ஆனந்த் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • இன்ஸ்பெக்டர் பதுர்நிஷா பேகம் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

திருப்பூர்:

திருப்பூர் மங்கலம் ரோடு வெங்கடாசலபுரம் 3-வது வீதியில் உள்ள மசாஜ் சென்டரில் கடந்த 1-12-2022 அன்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் புகுந்து அங்கிருந்த பெண் ஊழியர்களை கத்தியால் தாக்கி பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த சையது முகமது இக்ரம் (வயது 26), தெற்கு ேதாட்டத்தை சேர்ந்த கார்த்திக் (27), கே.வி.ஆர்.நகரை சேர்ந்த காளிஸ்வரன் (27), ஆனந்த் (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சையது முகமது இக்ரம், கார்த்திக், காளிஸ்வரன், ஆனந்த் ஆகிய 4 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். சிறப்பாக செயல்பட்ட மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்ரா, சிறந்த முறையில் சாட்சிகளை விரைந்து ஆஜர் செய்த இன்ஸ்பெக்டர் பதுர்நிஷா பேகம் மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

Tags:    

Similar News