உள்ளூர் செய்திகள்

கும்மியாட்டம்.

பெருமாநல்லூரில் கும்மியாட்ட பயிற்சி தொடக்க விழா - இன்று மாலை நடக்கிறது  

Published On 2022-11-18 06:37 GMT   |   Update On 2022-11-18 06:37 GMT
  • மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன் முன்னிலை வகிக்கிறார். ேக.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைக்கிறார். 
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீதிக்காடு பாலாமணி செல்வராஜ் செய்துள்ளார்.

பெருமாநல்லூர்:

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஸ்ரீ செல்வ விநாயகர் வள்ளி கும்மியாட்ட குழுவின் சார்பில்‌ கும்மியாட்ட பயிற்சி தொடக்க விழா பெருமாநல்லூர் வீதிக்காடு விநாயகர் கோவிலில் இன்று மாலை தொடங்குகிறது. விழாவிற்கு ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி தலைமை தாங்குகிறார். மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன் முன்னிலை வகிக்கிறார். ேக.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தொடங்கி வைக்கிறார். 

இப்பயிற்சியானது இன்று முதல் தொடர்ந்து 30 நாட்கள் மாலை 7 மணி முதல்இரவு 9 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியானது பெண்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகும். பயிற்சியில் ஆர்வம் உள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான பயிற்சியை திருப்பூர் நாடகம் மற்றும் நாட்டுப்புற நல சங்க தலைவர் பூளவாடி எம். ராமசாமி மற்றும் ஆசிரியர் விருது பெற்ற ராசு ஆகியோர் வழங்குகிறார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீதிக்காடு பாலாமணி செல்வராஜ் செய்துள்ளார். 

Tags:    

Similar News