உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கரைப்புதூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் தடை குறித்து துண்டு பிரசுரம் விநியோகம்

Published On 2022-12-21 05:04 GMT   |   Update On 2022-12-21 05:04 GMT
  • வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
  • ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.இது குறித்த துண்டு பிரசுரங்களை வியாபாரிகள்,மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சி செயலாளர் காந்திராஜ், வார்டு உறுப்பினர்கள் உமா மகேஷ்குமார், ஜோதிமணி முத்துசாமி,சாந்தி ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News