உள்ளூர் செய்திகள்

முகாமில் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பேசிய காட்சி. 

சட்ட விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா

Published On 2022-11-15 07:07 GMT   |   Update On 2022-11-15 07:07 GMT
  • மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார்.
  • திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி சார்பில் குழந்தைகள் தினம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, தேசிய சட்ட விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் மாணவர்களுக்கு போதை ஒழிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News