உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பருவநிலை மாற்றம் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Published On 2022-10-30 07:51 GMT   |   Update On 2022-10-30 07:51 GMT
  • திருப்பூர் பகுதிகளில் வெயில், மழை என மாறி மாறி வித்தியாசமான சூழல் நிலவுகிறது.
  • காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்து , மாத்திரைகளை வாங்கலாம்.

திருப்பூர்:

திருப்பூரில் பருவநிலை மாறி மாறி வருவதால் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர் பகுதிகளில் வெயில், மழை என மாறி மாறி வித்தியாசமான சூழல் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேரிடும். இதனால் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

மேலும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். இது போல் தங்களது வீடுகளின் அருகில் மழைநீர் தேங்காத வகையில் பொதுமக்கள் பார்த்து கொள்ள வேண்டும். சிரட்டை, டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் வீடுகளின் அருகில் இருந்தால் உடனே அதனை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் அதில் தேங்கும் மழைநீர் மூலம் கொசு உற்பத்தியாகும். காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்து , மாத்திரைகளை வாங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.  

Tags:    

Similar News