உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

9-ந்தேதி வேலைநிறுத்தம் - திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் பங்கேற்க முடிவு

Published On 2023-11-02 07:50 GMT   |   Update On 2023-11-02 07:51 GMT
  • வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
  • போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

திருப்பூர்:

காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் பங்கேற்கிறது. போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஓரிரு நாளில் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூடி போராட்டத்தில் பங்கேற்பது, லாரிகளை நிறுத்துவது குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

Tags:    

Similar News