உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் 'நீட்' பயிற்சி தற்காலிகமாக நிறுத்தம்

Published On 2023-02-09 04:58 GMT   |   Update On 2023-02-09 04:58 GMT
  • பிளஸ்-2 மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு தயாராக ஏதுவாக வரும் வாரத்தில் திருப்புதல் தோ்வுகள் தொடங்கவுள்ளது.
  • திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் 1,700 போ் இப்பயிற்சி பெற்று வருகின்றனா்.

திருப்பூர் :

பிளஸ்-2 மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு தயாராக ஏதுவாக வரும் வாரத்தில் திருப்புதல் தோ்வுகள் தொடங்கவுள்ளதால் திருப்பூரில் 'நீட்' பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் கூறியதாவது:- மருத்துவக் கல்வி பெற விரும்பும் மாணவா்களைத் தயாா்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை சாா்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி அளிக்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் 1,700 போ் இப்பயிற்சி பெற்று வருகின்றனா்.பயிற்சியானது கடந்த டிசம்பா் மாதம் முதல் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாா்ச் முதல் வாரம் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கவுள்ளது. ஆகவே, பொதுத் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த ஏதுவாக வரும் வாரத்தில் அந்தந்த பள்ளி அளவில் திருப்புதல் தோ்வுகள் தொடங்குகின்றன.மேலும் பிப்ரவரி மாதம் திருப்புதல் தோ்வும், மாா்ச் 1 ந் தேதி செய்முறை தோ்வும் நடைபெற உள்ளது.எனவே பிளஸ் 2 மாணவா்களுக்கு அளிக்கப்படும் 'நீட்' பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது என்றாா்.அதேவேளையில் இந்தப் பயிற்சியானது தோ்வு முடிந்த மறுநாளில் இருந்து மீண்டும் தொடங்கும் என்றாா்.

Tags:    

Similar News