உள்ளூர் செய்திகள்
அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை
- மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
- 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது.
வீரபாண்டி :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.
நேற்று முதல் 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது. மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாள் மண்டலபூஜை நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.