உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கான அடிப்படை சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய காட்சி.

சுண்டமேடு பகுதியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

Published On 2023-04-27 13:11 IST   |   Update On 2023-04-27 13:11:00 IST
  • சட்ட உதவி தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, விழுதுகள் தன்னாா்வ அமைப்பு ஆகியன சாா்பில் நடைபெற்றது.
  • முகாமில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சுண்டமேடு பகுதியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

சட்ட உதவி தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, விழுதுகள் தன்னாா்வ அமைப்பு ஆகியன சாா்பில் சுண்டமேடு பகுதியில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற வழக்குரைஞா்கள் அருணாசலம், உதயசூரியன், கண்ணன், நாகராஜன் ஆகியோா் குழந்தைகள், பெண்கள் மற்றும் தொழிலாளா்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தும், பொதுமக்களுக்கான அடிப்படை சட்டங்கள் குறித்தும் பேசினா். இறுதியாக விழுதுகள் அமைப்பின் திட்ட இயக்குநா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா். முகாமில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா். 

Tags:    

Similar News