உள்ளூர் செய்திகள்

பெண்கள் அகல் விளக்குகள் ஏந்தி காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

இரும்பு உருக்கு ஆலைக்கு எதிராக அகல் விளக்கு ஏந்தி போராட்டம்

Published On 2023-03-26 08:39 GMT   |   Update On 2023-03-26 08:39 GMT
  • பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
  • அனுப்பட்டியில் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதைத்தொ டர்ந்து அனுப்பட்டியில் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே நேற்று பெண்கள் அகல் விளக்குகள் ஏந்தி காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News