உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில்  கலந்து கொண்டவர்களின் காட்சி. 

உடுமலையில் கும்மியாட்ட நிகழ்ச்சி

Published On 2023-09-29 12:35 IST   |   Update On 2023-09-29 12:35:00 IST
  • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள்.

உடுமலை:

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கலைக்குழுவினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன்,மாவட்ட துணை சுற்றுலா அதிகாரி ஆனந்தன் தொடங்கி வைத்தனர்.இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள். ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.இதில் உடுமலை தாசில்தார் சுந்தரம்,போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை அமராவதி அணைப்பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார்.

அதைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News