உள்ளூர் செய்திகள்

காங்கேயம் இன மாடுகள் - ரூ.15 லட்சத்துக்கு விற்பனை

Published On 2022-12-13 09:40 IST   |   Update On 2022-12-13 09:40:00 IST
  • ரூ.66 ஆயிரத்துக்கு காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.
  • ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 60 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

காங்கயம் : 

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்- பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 60 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

இதில் 40 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.66 ஆயிரத்துக்கு காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.

Tags:    

Similar News