உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்ட காட்சி.

மங்கலத்தில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் - முககவசம் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-07-06 04:39 GMT   |   Update On 2022-07-06 04:39 GMT
  • மங்கலம் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முககவசம் , கிருமிநாசினி வழங்கப்பட்டது.
  • மங்கலம் நால்ரோடு பகுதியில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் சித்தர்குரு சித்தா மருந்தகம் மற்றும் தி.மு.க. இளைஞரணி சார்பில் மங்கலம் பெண்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு முககவசம் , கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதனை மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லிஸியம்மாள் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மங்கலம் நால்ரோடு பகுதியில் காவல்துறையினருக்கும் , பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல்,சித்தர் குரு மருந்தக உரிமையாளர் முகமது ஹாசிம், தி.மு.க. கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினர் முகமதுஇத்ரீஸ் , மாவட்ட பிரதிநிதி சகாபுதீன்,தி.மு.க. கட்சியின் மங்கலம் ஊராட்சி 3-வது வார்டு செயலாளர் முஜிபுர்ரகுமான், திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முகமது உசேன்,மங்கலம் சரவணக்குமார், மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரபிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News