உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

உடுமலையில் சர்வதேச ஓய்வுஊதியம் பாதுகாப்பு தினத்தில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-02 07:37 GMT   |   Update On 2022-10-02 07:37 GMT
  • அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கௌரவமான வாழ்க்கை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
  • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சர்வதேச ஓய்வூதியர் பாதுகாப்பு தினமான இன்று அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் கௌரவமான வாழ்க்கை உத்தரவாதப்படுத்த வேண்டும், அனைத்து முதியோர்களுக்கும் வேறுபாடு பார்க்காமல் பணம், மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத்திற்கு ரத்து செய்து ஏற்கனவே உள்ள பயனளிப்பு ஓய்வு பெற்று அமல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியம் அமைப்பு செயலாளர் ஸ்ரீரங்கன், அரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வூதியர் சங்கம் காளிமுத்து, மின்வாரியம் ஓய்வூதியம் பெற்றோர் நல அமைப்பு எஸ்.எஸ்.அலி, அகில இந்திய அஞ்சல் ஓய்வூதிய அமைப்பு செயலாளர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News