உள்ளூர் செய்திகள்

தேசிய கொடியுடன் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா பேரணி

Published On 2022-08-14 08:20 GMT   |   Update On 2022-08-14 08:20 GMT

திருப்பூர் :

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக திருப்பூர் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடந்தது. பேரணிக்கு பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ஏ.ராமசாமி தலைமை தாங்கினார்.

மேலும் 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததை முன்னிட்டு, மாணவ-மாணவிகள் தேசிய கொடியை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News