உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பலவஞ்சிபாளையத்திற்கு பஸ்கள் இயக்கம் தொடக்க விழா

Published On 2022-09-30 11:53 GMT   |   Update On 2022-09-30 11:53 GMT
  • பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
  • போக்குவரத்துக் கழக அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வீரபாண்டி :

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பலவஞ்சிபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் திருப்பூரில் உள்ள பள்ளிக்கும் கல்லூரிக்கும் அதே போல் ஏராளமான பொதுமக்கள் பனியன் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

இப்பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 54 வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் சொந்த முயற்சியால் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியன்,4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் ஆகியோர் போக்குவரத்துக் கழக அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு பொது மக்களுக்கு 3 மினி பேருந்துகளை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இயக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சி வஞ்சி நகர் பகுதியில் நடைபெற்றது.மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் பத்மநாபன், 54 வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், 57 வது வார்டு கவுன்சிலர் கவிதா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று மினி பேருந்துகளை துவக்கிவைத்தனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பயணித்தனர் . முதல் நாள் அனைவரும் இலவசமாக பயணித்தனர். 

Tags:    

Similar News