உள்ளூர் செய்திகள்

தேங்காய் பருப்பு

வெள்ளகோவிலில் ரூ.37¼ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2023-04-12 15:25 IST   |   Update On 2023-04-12 15:25:00 IST
நேற்று 124 விவசாயிகள் கலந்து கொண்டு 51 ஆயிரத்து 850கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று தேங்காய் பருப்பும், வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலமும் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

நேற்று 124 விவசாயிகள் கலந்து கொண்டு 51 ஆயிரத்து 850கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதிகளை சேர்ந்த 11 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.81.65-க்கும், குறைந்தபட்சம் ரூ.59.15-க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.37 லட்சத்து 39 ஆயிரத்து 804-க்கு ஏலம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News