உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வரத்து குறைவால் ஆடுகள் விலை உயர்வு

Published On 2023-08-13 04:49 GMT   |   Update On 2023-08-13 04:49 GMT
  • தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை.
  • கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.

மூலனூர்

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் சந்தை நடந்தது. கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரம் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து இருந்தது.

இது குறித்து ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-

மூலனூர் பகுதியில் ஆடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை.எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.

இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News