உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை - சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-09-16 11:04 GMT   |   Update On 2023-09-16 11:04 GMT
  • 90 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
  • கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாள் முழுதும் பஸ் இயக்கப்படும்.

திருப்பூர்

ஞாயிற்றுக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 90 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

நாளை முகூர்த்த தினம், 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை என்பதால், வெளியூர் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். பயணிகள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 20 பஸ்கள்,கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு 50 பஸ்கள், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகை, வேளாங்கன்னி உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து திருப்பூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாள் முழுதும் பஸ் இயக்கப்படும். வெளியூர் சென்றவர் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை இரவு சிறப்பு பஸ் இயங்கும்.

அனைவருக்கும் ஒரே நேரத்தில் பயணிக்க திட்டமிடாமல், முன்கூட்டியே பஸ் நிலையத்திற்கு வந்து, பஸ்களின் தங்களுக்கான இருக்கையை உறுதி செய்து கொள்வது நல்லது.

சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News