உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

போலீஸ் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பு - 1 ம் தேதி தொடங்குகிறது

Published On 2022-07-28 08:20 GMT   |   Update On 2022-07-28 08:20 GMT
  • 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் :

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமத்தின் மூலம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 15-ந் தேதியாகும். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 1-ந் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு இன்று (புதன்கிழமை) முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியின் இறுதியில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News