உள்ளூர் செய்திகள்

கொடியேற்று விழாவில் பங்கேற்றவர்கள். 

63 வேலம்பாளையம் பகுதியில் அ.ம.மு.க., கொடியேற்று விழா

Published On 2022-08-22 05:09 GMT   |   Update On 2022-08-22 05:09 GMT
  • 63வேலம்பாளையம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் அ.ம.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
  • கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமை தாங்கி கொடியேற்றினார்

மங்கலம் :

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் கிழக்கு ஒன்றியம் சார்பில் பல்லடம் ஒன்றியம் 63 வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மூணுமடை, 63வேலம்பாளையம் நால்ரோடு ஆகிய பகுதிகளில் அ.ம.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி கொடியேற்றினார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார், 63வேலம்பாளையம் ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 63வேலம்பாளையம் கிளைசெயலாளர் சிவசுப்பிரமணி, கிழக்கு அண்ணாநகர் கிளை செயலாளர் சுரேஷ், பல்லடம் கிழக்கு ஒன்றிய விவசாய அணி ரவிசந்திரன் , மாணிக்காபுரம் ஊராட்சி செயலாளர் பூபதி மற்றும் கிளைச்செயலாளர்களான முருகன்,பிரகாஷ்,வலையபாளையம் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News