உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவில் நூல் மில்லில் தீ விபத்து

Published On 2023-06-08 04:50 GMT   |   Update On 2023-06-08 04:50 GMT
  • எந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது.
  • எந்திரம் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாகின.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் ரெட்டில வலசு பகுதியில் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. நேற்று பகலில் அங்குள்ள எந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் யாருக்கு எவ்வித காயம் இல்லை. எந்திரம் மற்றும் பஞ்சுகள் எரிந்து சேதமாகின. 

Tags:    

Similar News