உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அவினாசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-09-13 04:52 GMT   |   Update On 2023-09-13 04:52 GMT
  • திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
  • 15-ந் தேதி காலை 11 மணிக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெறுகிறது.

திருப்பூர்:

திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 15-ந் தேதி காலை 11 மணிக்கு அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

தாலுகா அளவில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த கூட்டம் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இந்த முறை அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது.

அனைத்து விவசாயிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News