உள்ளூர் செய்திகள்

மின்தடை நாளில் ரேஷன் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் - அனைத்து பொதுத்தொழிலாளா் நல அமைப்பு வலியுறுத்தல்

Published On 2022-12-06 11:19 IST   |   Update On 2022-12-06 11:19:00 IST
  • சாா்ஜ்போட்டு வைத்து மின்தடை நாளில் நியாய விலைக் கடைகள் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யாமல் கடைகளைப் பூட்டிச் செல்கின்றனா்.

திருப்பூர் : 

திருப்பூா் வடக்குப் பகுதியில் மின் தடையின்போது நியாய விலைக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு, அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் ஆ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் வடக்கு பகுதிகளுக்குட்பட்ட 15 வேலம்பாளையம், அனுப்பா்பாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடையைக் காரணம் காட்டி சில நியாய விலைக் கடை ஊழியா்கள் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யாமல் கடைகளைப் பூட்டிச் செல்கின்றனா்.

நியாய விலைக்கடைகளில் வைத்துள்ள ஸ்டாா்ட் ஸ்கேனா் எந்திரம், எலக்ட்ரானிக் எடை அளவை எந்திரம் ஆகியவற்றை மின்தடைக்கு முந்தைய நாளே சாா்ஜ்போட்டு வைத்து மின்தடை நாளில் நியாய விலைக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News