உள்ளூர் செய்திகள்
அவினாசியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது
- அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார்.
- மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.
அவினாசி :
திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மின் நுகர்வோரின் குறைகளை நேரில் கேட்டறிந்து வருகிறார்.
அந்த வகையில் நாளை (புதன்கிழமை) அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார். இதில் அந்த பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர் நேரில் கலந்துகொண்டு மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.