உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பிரச்சினை ஏற்படாமல் பனியன் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் - சைமா வலியுறுத்தல்

Published On 2022-10-13 16:14 IST   |   Update On 2022-10-13 16:14:00 IST
  • பனியன் உற்பத்தி நிறுவனங்களில், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது.
  • பனியன் நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளருடன் பேசி போனஸ் வழங்க வேண்டும்

திருப்பூர் :

நிட்டிங், டையிங், காம்பாக்டிங், எம்ப்ராய்டரிங், பனியன் உற்பத்தி நிறுவனங்களில், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பனியன் நிறுவனங்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு, தொழிலாளருடன் பேசி போனஸ் வழங்க வேண்டும்.

பண்டிகைக்கு முன்னதாகவே போனஸ் வழங்கி முடிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளை போலவே, எவ்வித பிரச்னையும் ஏற்படாதவகையில் சுமூகமாக பேசி போனஸ் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News