உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை படத்தில் காணலாம்.

திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட 2583 மதுபாட்டில்கள் அழிப்பு

Published On 2023-04-28 10:21 GMT   |   Update On 2023-04-28 10:21 GMT
  • விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
  • 247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மண்ணில் ஊற்றி அழித்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் சார்பில் சட்டவிரோதமாக மற்றும் முறைகேடாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் 247 வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 2583 மது பாட்டில்களை மாநகர மதுவிலக்கு போலீசார் கலால் கோட்ட அலுவலர் ராகவி முன்னிலையில் மண்ணில் ஊற்றி அழித்தனர்.

Tags:    

Similar News