உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காங்கயம் இன காளைகளுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் மவுசு

Published On 2023-04-18 12:17 GMT   |   Update On 2023-04-18 12:17 GMT
  • காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
  • இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.44 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.

இதன்படி ஞாயிற்று க்கிழமை நடைபெற்ற சந்தையில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.மொத்தம் 82 காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 40 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கயம் இன மயிலை பசுமாடு ரூ.66 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.44 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.17 லட்–சத்–திற்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News