வெள்ளகோவிலில் ரூ. 51 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
- செவ்வாய்கிழமை ௧௩௯ விவசாயிகள் கலந்து கொண்டு 70ஆயிரத்து 787கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.51லட்சத்து 73ஆயிரத்து 537க்கு வணிகம் நடைபெற்றது.
வெள்ளகோவில், டிச.29-
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
செவ்வாய்கிழமை 139விவசாயிகள் கலந்து கொண்டு 70ஆயிரத்து 787கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 13வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 85.70க்கும், குறைந்தபட்சம் ரூ.61.90க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.51லட்சத்து 73ஆயிரத்து 537க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.